திருகோணமலையில் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை மாவட்டம் – அலஸ்தோட்டம் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை வீட்டிலிருந்து சென்ற நிலையில் இன்றைய தினம் (15-04-2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சாம்பல்தீவு-சல்லி வாட்டு இலக்கம் 02யைச் சேர்ந்த 38 வயதான ராஜலிங்கம் பிரபாகரன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். அலஸ்தோட்டம் கடற்கரையில் மீக்கப்பட்ட சடலத்தை திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் பார்வையிட்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக பொது வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார். … Continue reading திருகோணமலையில் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!